டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணையை டிசம்பர் 13 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு ஒத்திவைப்பு
Updated On :1 பிப்ரவரி 2024, 11:03 am

DIN

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணையை டிசம்பர் 13 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் -ஒழுங்கு) மீதும், புகார் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யைத் தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

நவம்பர் 30-ஆம் தேதி அப்போதைய உள்துறைச்செயலரும், தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே. பிரபாகர்  அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராகி சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தும் ஆஜராகவில்லை. 

இதையடுத்து வெள்ளிக்கிழமை (டிச. 2) நடைபெற்ற விசாரணையின் போதும் பிரபாகர் ஆஜராகவில்லை.  இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியம் அளிக்கத் தயாராக இருந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டிருப்பதால் ஆஜராக இயலாத நிலை ஏற்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையின் போது தெரிவித்தனர். 

இதையேற்றுக்கொண்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.புஷ்பராணி உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.