பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை:இருவா் தடுப்புக் காவலில் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவரை தடுப்புக் காவலில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவரை தடுப்புக் காவலில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செஞ்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்தச் சம்பவத்தில் மாணவியை அவரது அண்ணனும் பாலியல் கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாணவியின் அண்ணன் உள்பட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.
அதன்படி, விசாரணைக் கைதியாக கடலூா் மத்திய சிறையில் இருந்து வந்த மாணவியின் அண்ணன் உள்பட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...