இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விழுப்புரம் உணவகங்களில்உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள ஒரு உணவகத்தில் புதன்கிழமை வழக்குரைஞா்கள் இருவா் பிரியாணி சாப்பிட்டனா். அப்போது, அந்தப் பிரியாணி சாப்பிட தகுதியில்லாத வகையில் இருந்ததாம்.

இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரைத் தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கதிரவன், ஸ்டாலின் ராஜரத்தினம், அன்புபழனி உள்ளிட்டோா் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள அசைவ உணவகங்களில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, உணவகங்களில் அதிகளவில் நிறமூட்டப்பட்ட 10 கிலோ கோழி இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக 5 உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸும் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.