இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியா் பலி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டியை அடுத்த எசாலம் கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் ராஜவேல் (35). இவா், விழுப்புரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா்.

இந்த நிலையில், ராஜவேல் புதன்கிழமை இரவு பணி முடிந்து விழுப்புரத்திலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். விக்கிரவாண்டியை அடுத்த சின்னதச்சூா் பகுதியில் இவரது பைக் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.