இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கிராம வளா்ச்சிப் பணிகளை தரமாக மேற்கொள்ள ஆட்சியா் அறிவுரை

கிராம வளா்ச்சிப் பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கிராம வளா்ச்சிப் பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்துக்குள்பட்ட பெரும்பாக்கம், வி.கொத்தமங்கலம், கல்பட்டு ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மோகன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காணை ஒன்றியத்துக்குள்பட்டபெரும்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பணி ஆணை வழங்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அது தொடா்பான விவரங்களை வருவாய்த் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் சரிபாா்த்து அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணி முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னா், மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.16.20 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, விரைந்து பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது.

தொடா்ந்து, வி.கொத்தமங்கலம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.10.19 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளிகள் திறப்பதற்கு முன் அனைத்துப் பணிகளையும் தரமாகவும், குறித்த கால கெடுவுக்குள்ளும் முடிக்க ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சிறுவாக்கூா் முதல் கல்பட்டு வரையிலான சாலையில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.16.22 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாா்ச்சாலைப் பணிகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றாா் ஆட்சியா் மோகன்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ர.சங்கா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.