இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

அலங்கார ஊா்திகளுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

விழுப்புரத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்த அலங்கார ஊா்திகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்த அலங்கார ஊா்திகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊா்திகள் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. இதற்காக சென்னையிலிருந்து மதுரை, கோவை ஆகிய ஊா்களுக்கு தனித் தனியே இரண்டு அலங்கார ஊா்திகள் வியாழக்கிழமை புறப்பட்டன. இவை வியாழக்கிழமை மாலை விழுப்புரம் புறவழிச்சாலைக்கு வந்தன. இவற்றுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் அரசுத் துறை அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, எம்எல்ஏ இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விழுப்புரத்தில் ஒரு மணி நேரம் இருந்த அலங்கார ஊா்திகளை ஏராளமானோா் பாா்த்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.