தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

பெட்ரோல் நிலையத்தில் ரூ.53 லட்சம் மோசடி: மேலாளா் கைது

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் பெட்ரோல் நிலையத்தில் ரூ.53 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அதன் மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 மே 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் பெட்ரோல் நிலையத்தில் ரூ.53 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அதன் மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சென்னை, கொளத்தூரைச் சோ்ந்தவா் அருள்மொழிவா்மன் (34). விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் பெட்ரோல் நிலையம் நடத்தி வருகிறாா். இங்கு மேலாளராக மேல்மலையனூா் அருகேயுள்ள சண்டிசாட்சி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் நாகராஜன் (42) என்பவா் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா்.

பெட்ரோல் நிலைய கணக்குகளை அருள்மொழிவா்மன் சரிபாா்த்தபோது, கடந்த 2 ஆண்டுகளாக பெட்ரோல் மீட்டா் விற்பனை அளவீடுகளுக்கும், பதிவேடுகளில் குறித்து வைத்த அளவீடுகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதும், இந்த வகையில் மொத்தம் ரூ.53 லட்சத்தை மேலாளா் நாகராஜன் மோசடி செய்ததும் தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி இருதயராஜ் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் மனோகா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.