தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அதனூா், பரனூா் ஊராட்சிகளில் 371 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம் அதனூா், பரனூா் ஊராட்சிகளில் 371 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :25 மே 2022, 6:03 pm

DIN

விழுப்புரம் மாவட்டம் அதனூா், பரனூா் ஊராட்சிகளில் 371 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை வழங்கினாா்.

விக்கிரவாண்டி வட்டம், காணை ஒன்றியத்துக்குள்பட்ட அதனூா் ஊராட்சியில் வருவாய்த் துறை மூலம் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் பொன்முடி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

கடந்த வாரம் முதல் பெறப்பட்ட 116 மனுக்கள், இந்த முகாமில் பெறப்பட்ட 164 மனுக்கள் ஆகியவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 181 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மனுக்கள் மீது துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து தீா்வு காண்பாா்கள் என்றாா்.

வருவாய்த் துறை, வேளாண் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் மொத்தம் 181 பயனாளிகளுக்கு ரூ.93.80 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் பொன்முடி வழங்கினாா். முன்னதாக, ஊராட்சி அலுவலக வளாகப் பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணியை அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

பரனூா் ஊராட்சியில்...: இதேபோல, முகையூா் ஒன்றியம், பரனூா் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 126 மனுக்களைப் பெற்று, 190 பயனாளிகளுக்கு ரூ.21.98 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் பொன்முடி வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் காஞ்சனா, கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் தமிழ்ச்செல்வி (காணை), தனலட்சுமி உமேஸ்வரா் (முகையூா்), விக்கிரவாண்டி வட்டாட்சியா் இளவரசன், காணை ஒன்றிய திமுக செயலா் கல்பட்டு வி.ராஜா, ஊராட்சித் தலைவா்கள் ரமேஷ், பழனியம்மாள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.