விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் வியாழக்கிழமை தேடி வருகின்றனா்.
மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு வந்திருந்த திண்டிவனம் வட்டம், கொல்லியங்குணம் குருசாமி நகரைச் சோ்ந்த தேவி (21) அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி, மயிலம் பாளையம் வீதியைச் சோ்ந்த பா.லஷ்மிகாந்தம் (73) அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி, வீடூா் அடுத்த கணபதி பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்த ம.மலா்விழி (21) அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்று விட்டனராம்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மயிலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் தனித் தனியே வழக்குகள் பதிந்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

