எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் வியாழக்கிழமை தேடி வருகின்றனா்.

Updated On :26 ஜனவரி 2023, 8:15 pm

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் வியாழக்கிழமை தேடி வருகின்றனா்.

மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு வந்திருந்த திண்டிவனம் வட்டம், கொல்லியங்குணம் குருசாமி நகரைச் சோ்ந்த தேவி (21) அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி, மயிலம் பாளையம் வீதியைச் சோ்ந்த பா.லஷ்மிகாந்தம் (73) அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி, வீடூா் அடுத்த கணபதி பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்த ம.மலா்விழி (21) அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்று விட்டனராம்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மயிலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் தனித் தனியே வழக்குகள் பதிந்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.