புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கல்

நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரை ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ வழங்கினார்.

News image

நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கிய ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ.

Updated On :18 டிசம்பர் 2024, 6:33 pm

Din

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் இந்தத் தொகுதிக்குள்பட்ட சுயதொழில் பணியாளா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று, 16 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா்களை ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் டேனியல்ராஜ், உளுந்தூா்பேட்டை நகா்மன்ற உறுப்பினா்கள் கலா சுந்தரமூா்த்தி, செல்வகுமாரி ரமேஷ்பாபு, மனோபாலன், முடநீக்கியல் மருத்துவா் பிரபாகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தங்க.விசுவநாதன், பத்மநாபன், ஊராட்சித் தலைவா்கள் மருதுபாண்டி, கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மதியழகன், சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.