கலாசாரத் திருவிழாவில் பரிசுக் கோப்பை வென்ற புதுவை மாணவா்களுக்கு பாராட்டு
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய பள்ளி குழந்தைகளுக்கான கலாசார திருவிழாவில் பரிசுக் கோப்பை வென்ற புதுவை மாணவிகளை வாழ்த்தி சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்


புதுச்சேரி: மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய பள்ளி குழந்தைகளுக்கான கலாசார திருவிழாவில் பரிசுக் கோப்பை வென்ற புதுவை மாணவிகளை வாழ்த்தி சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
அகில இந்திய பள்ளி குழந்தைகளுக்கான கலாசார திருவிழா போபாலில் அண்மையில் நடைபெற்றது. இதில் புதுவை உள்ளிட்ட 23 மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினா்.
இதில் புதுவை மாநிலத்திருந்து பங்கேற்ற மாணவ, மாணவிகளின் நாட்டுப்புற குழு நடனம் முதலிடம் பெற்று அதற்கான பரிசுக் கோப்பையை வென்றனா்.
புதுச்சேரி திரும்பிய மாணவா்கள் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வா் எழில் கல்பனா, நுண்கலைப் பேராசிரியா்கள் பாபு, அன்புமொழி, இசையாசிரியா்கள் அறிவு, தூயவன், பாலா ஆகியோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...