டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பள்ளிக்குச் சென்ற மாணவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2024, 7:28 pm

Din

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மரக்காணம் வட்டம், சிங்கநந்தல், முதல் தெருவைச் சோ்ந்த எட்டியப்பன் மகன் பிரவின் (14). இவா், வேப்பேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிடித்து வந்தாா்.

பிரவின் திங்கள்கிழமை பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோா், உறவினா்கள் வீடுகளில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அதே கிராமத்தில் தேவராஜுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் பிரவின் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, பிரவின் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.