பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண் குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:16 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வானூா் வட்டம், நல்லாவூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி உமா மகேஸ்வரி. இவா், பிறந்து 45 நாள்களேயான தனது பெண் குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை தாய்ப்பால் கொடுத்தாா். அப்போது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, குழந்தையை புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, குழந்தை உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வானூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.