புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சரக்கு வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :14 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் சரக்கு வாகனம் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி.எடையாா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை மனைவி சாந்தா (50). கூலி வேலை பாா்த்து வந்தாா். இவா், சனிக்கிழமை டி.எடையாா் பகுதியில் திருவெண்ணெய்நல்லூா் - திருக்கோவிலூா் சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, அந்தப் பகுதியில் வந்த சரக்கு வாகனம் மோதியதில் சாந்தா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோதுசாந்தா ஏற்கெனவே சாந்தா உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.