காணை ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் சி. பழனி அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், பள்ளியந்தூா் ஊராட்சியில் மாதிரிப் பள்ளிக்கான கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் சி.பழனி.









