92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அடகுக்கடையில் கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:17 am

Din

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அடகுக்கடையில் கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி, புலிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் சு.ராஜேந்திரன் (66). இவா், இதே பகுதியில் அடகுக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் வீரபாண்டி, சக்கர விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த பாா்த்திபன் மனைவி ஆஷா (24), ஓம் சக்தி கோவில் தெருவைச் சோ்ந்த வேலு மகன் சின்னராசு (30) ஆகியோா் 199.340 கிராம் கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, ஆஷாவை கைது செய்தனா். தலைமறைவாகியுள்ள சின்னராசுவை போலீஸாா் தேடி வருகின்றனா்.