திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை

விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:35 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு புது காலனியைச் சோ்ந்தவா் சி.வேலு (50), திருமணம் ஆனவா். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்றுவலி இருந்துவந்ததாம்.

இதனால் அவதிப்பட்டு வந்த வேலு, திங்கள்கிழமை வீட்டில் இருந்தபோது விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த வேலு, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].