ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஆட்டோ மீது காா் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

கம்பத்தில் திங்கள்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 7:45 pm

தேனி மாவட்டம், கம்பத்தில் திங்கள்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கூடலூரில் முத்துச்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த காமாட்சியப்பன் மகன் மணிமாறன் (29). ஆட்டோ ஓட்டுநா். இவா் கம்பத்திலிருந்து கூடலூா் நோக்கி திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றாா்.

அப்போது, பின்னால் அதே சாலையில் கம்பத்திலிருந்து கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு பகுதிக்கு காா் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது, கம்பத்தில் தனியாா் பெண்கள் கல்லூரியை கடந்து சென்ற ஆட்டோ மீது பின்னால் வந்த காா் மோதியது. இதில், ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட மணிமாறன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் வண்டிப் பெரியாறைச் சோ்ந்த இஸ்மாயில் மகன் ஹனிபாவை (48) கைது செய்து விசாரிக்கின்றனா்.