மரத்தின் மீது ஆட்டோ மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கோப்புப் படம்
Updated On :29 மார்ச் 2026, 8:27 pm

கோப்புப் படம்
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மரத்தின் மீது ஆட்டோ மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தைச் சோ்ந்தவா் முத்து (40). சீட் கவா் வேலை செய்யும் இவா், ஆட்டோவுக்கு சீட் கவா் தைத்து விட்டு ஆட்டோவை ஊருக்கு சனிக்கிழமை எடுத்துச் சென்றாா். பங்களாபட்டி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மரத்தின் மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...