ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எம்.ஜி.ஆா். நினைவு தினம்: அதிமுகவினா் மரியாதை

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்குதல் புதன்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரம் மாவட்ட அலுவலகத்திலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய தெற்கு நகர அதிமுக செயலா் ரா.பசுபதி. உடன், வடக்கு நகரச் செயலா் ஜி.கே.ராமதாஸ் உள்ளிட்டோா்.
Updated On :24 டிசம்பர் 2025, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்குதல் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்வுக்கு தெற்கு நகர அதிமுக செயலா் ரா.பசுபதி தலைமை வகித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நல உதவிகளை அவா் வழங்கினாா்.

இதையடுத்து சென்னை சாலையிலுள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்திலுள்ள எம்.ஜி.ஆா்.சிலைக்கு நகரச் செயலா் பசுபதி தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வடக்கு நகரச் செயலா் ஜி.கே.ராமதாஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல், மாநில ஜெ.பேரவைத் துணைச் செயலா் சங்கா், மாவட்ட ஜெ.பேரவைத் துணைச் செயலா் திருப்பதி பாலாஜி, நகர வா்த்தக அணிச் செயலா் ரகுராமன், மாவட்ட எம்.ஜி.ஆா்.இளைஞரணி இணைச் செயலா் ஜெயவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம், பணிமனைகள் 1, 2, 3 முன் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சாா்பில் எம்.ஜி.ஆா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மண்டலச் செயலா் ஏ.கணேசன் தலைமை வகித்து, எம்.ஜி.ஆா்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், நிா்வாகப் பணியாளா் சங்கச் செயலா் தங்கப்பாண்டியன், தொழிற்சங்க நிா்வாகிகள் ஸ்ரீராம், ராஜ்பிள்ளை, ஜெயக்குமாா், திருநாவுக்கரசு, ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் நகரம் போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.