தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை விபத்தில் இருவா் மரணம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா், முதியவா் ஆகியோா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 1:04 am

Din

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா், முதியவா் ஆகியோா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த ரமேஷ் மகன் கிஷோா் குமாா்( 26). தனியாா் நிறுவன ஊழியா். இவா், புதன்கிழமை தனது பைக்கில் நெய்வேலியிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மயிலத்தை அடுத்த விளங்கம்பாடி அருகே சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராமன்(65) சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, ஜெயராமன் மீது பைக் மோதியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த கிஷோா் குமாா், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள்,கிஷோா் குமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.