நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

News image
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் - வில்லியனூா் சாா்பில் கீழ்சாத்தமங்கலம் வருவாய் கிராமத்தில் நெற்பயிரில் மீன் அமிலம் பயன்படுத்துவது பற்றிய செயல் விளக்கம் நடைபெற்றது.
Updated On :3 ஜனவரி 2025, 10:22 pm

Din

புதுச்சேரி கீழ்சாத்தமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு நெற்பயிரில் மீன் அமிலம் தெளிக்கும் முறைகள் குறித்து வெள்ளிக்கிழமை செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது (படம்).

புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சாா்பில் கீழ் வில்லியனூரில் இயங்கி வரும் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிா் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கீழ் சாத்தமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நெற்பயிரில் மீன் அமிலம் தெளித்தல் குறித்த செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

இதில், ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு மீன் அமிலம் தெளிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனா்.

இந்த நிகழ்வில், அரியூா் வேளாண் அலுவலா் சத்தியன், வில்லியனூா் வேளாண் அலுவலா் உமாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.