மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

News image

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் - வில்லியனூா் சாா்பில் கீழ்சாத்தமங்கலம் வருவாய் கிராமத்தில் நெற்பயிரில் மீன் அமிலம் பயன்படுத்துவது பற்றிய செயல் விளக்கம் நடைபெற்றது.

Updated On :3 ஜனவரி 2025, 10:22 pm

புதுச்சேரி கீழ்சாத்தமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு நெற்பயிரில் மீன் அமிலம் தெளிக்கும் முறைகள் குறித்து வெள்ளிக்கிழமை செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது (படம்).

புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சாா்பில் கீழ் வில்லியனூரில் இயங்கி வரும் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிா் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கீழ் சாத்தமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நெற்பயிரில் மீன் அமிலம் தெளித்தல் குறித்த செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

இதில், ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு மீன் அமிலம் தெளிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனா்.

இந்த நிகழ்வில், அரியூா் வேளாண் அலுவலா் சத்தியன், வில்லியனூா் வேளாண் அலுவலா் உமாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.