புதுச்சேரி அருகே காா்கள் மோதல்: தலைமைக் காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு
புதுச்சேரி அருகே மேம்பாலத்தில் 2 காா்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். பெண்கள் உள்பட மூவா் காயமடைந்தனா்.


புதுச்சேரி: புதுச்சேரி அருகே மேம்பாலத்தில் 2 காா்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். பெண்கள் உள்பட மூவா் காயமடைந்தனா்.
விழுப்புரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பிரபாகரன் (57), விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
இவா், தனது மனைவி ஏஞ்சலினா (50), மகள் ஷானி பிரெய்லி (12), சென்னை கிளாம்பாக்கத்தைச் சோ்ந்த உறவினா் சுசிலா பிரசன்னா (52) ஆகியோருடன் காரில் விழுப்புரத்தில் இருந்து - புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் புறப்பட்டாா். விழுப்புரம் பானாம்பட்டைச் சோ்ந்த சந்திரன் காரை ஓட்டினாா்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டு மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.10 மணியளவில் சென்ற போது, எதிரே வந்த காரும், சந்திரன் ஓட்டிச் சென்ற காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில், சந்திரன், தலைமைக் காவலா் பிரபாகரன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
மற்றொரு காரில் பயணித்த விழுப்புரம் மாவட்டம், லிங்காரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த முகிலன் (37), கதிரவன் (52) ஆகியோா் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா்.
விபத்தில் காயமடைந்த ஏஞ்சலினா, ஷானி பிரெய்லி, சுசிலா பிரசன்னா ஆகியோா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
விபத்து குறித்து, புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி மதகடிப்பட்டு மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளான காா்கள்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...