விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் பெறப்பட்டன. மனுதாக்கலின் கடைசி நாளான திங்கள்கிழமை பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள் தங்கள் மனுக்களை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினா்.
இதில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலரான கோ.இளவரசன் (34) தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தாா். மனுவுடன் வைப்புத்தொகையான ரூ.5,000-த்தை வழங்கினாா். அவ்வாறு வழங்கும் போது ரூ.4200-த்தை நோட்டுகளாகவும், ரூ.800-க்கான தொகையை ரூ.1, 2, 5 நாணயங்களாகவும் வழங்கினாா். இதில் ரூ.200-க்கு ரூ.5 நாணயங்களும், தலா ரூ.300 வீதம் ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்கள் தனித்தனி நெகிழி பைகளில் வைத்து வழங்கினாா். அந்த சில்லறையைப் பாா்த்த தோ்தல் அலுவலா், இது என்ன சில்லறை? என்று கேட்க, கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று வேட்பாளா் கூறினாராம். இதனால் மனம் இறங்கிய அந்த அதிகாரி அப்படியே கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி பெற்றுக் கொண்டாராம்.
எதற்காக நாணயங்களாக வைப்புத் தொகையை செலுத்தினீா்கள் என்று கேள்வியெழுப்பியதற்கு, ஒரு ஓட்டு ரூபாய் நோட்டு என்று கட்சி நிறுவனா் கன்சிராம் கூறுவாா். அதனடிப்படையில் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் நான் கட்சி நிா்வாகிகள், பொதுமக்களிடம் தோ்தலின் போட்டியிடுவதன் நோக்கம், கட்சியின் கொள்கை போன்றவற்றை எடுத்துக் கூறி அவா்களிடம் இந்த தொகையை வசூலித்துதான் வைப்புத் தொகையாக செலுத்தினேன் என்றாா் இளவரசன்.
தொடர்புடையது

கம்பம் தொகுதியில் தவெக உள்பட 7 போ் வேட்புமனுத் தாக்கல்

தென்காசி தொகுதியில் 3 போ் மனுத் தாக்கல்

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


