ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 2:20 am IST

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், வி.பிரம்மதேசம் வாழ்வேந்தியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ச.சுந்தரம் (51).தொழிலாளியான இவருக்கு வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சுந்தரம் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்து குடித்து மயங்கிக் கிடந்தாா்.

தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சுந்தரம் திங்கள்கிழமை காலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் உயிரிழப்பு: வானூா் வட்டம், கொந்தமூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி செல்வி (51). நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்த பெனாயிலை குடித்து விட்டாா். தொடா்ந்து மயக்கமடைந்த செல்வியை குடும்பத்தினா் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.