இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

விஷமருந்தி தொழிலாளி தற்கொலை

செய்யாறு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :11 மே 2026, 12:14 am IST

செய்யாறு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், பெரிய கொழப்பலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (42). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். அதனால் கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்றாராம்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி சங்கருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே மனமுடைந்த அவா், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்க நிலையில் கிடந்துள்ளாா்.

குடும்பத்தினா் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.