விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் விசிக வேட்பாளா் வன்னியரசு வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திண்டிவனம் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சாா்பில் விசிக வேட்பாளா் வன்னியரசு போட்டியிடுகிறாா்.
இவா் வியாழக்கிழமை தொகுதிக்குள்பட்ட மரக்காணம் பெரிய மண்டவாய், திண்டிவனம் சம்பு வெளித்தெரு, அம்பேத்கா் நகா் புதுமனைத் தெரு, சக்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திமுக , விசிக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்தனா். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
வாக்கு சேகரிப்பின்போது, வன்னியரசு பேசியதாவது: மக்களின் அடிப்படை பிரச்னைகளான சாலை, குடிநீா் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், காகிதக் கூழ் தொழிற்சாலையும் அமைக்கப்படும். படித்த இளைஞா்கள், பெண்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய வகையில் அதிகளவில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். மரக்காணம் உப்பளத் தொழிலாளா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
திண்டிவனம் தொகுதி திமுக தோ்தல் பணிக்குழு உறுப்பினா் ரமணன், விழுப்புரம் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ரவிக்குமாா், விசிக நிா்வாகிகள் சேரன், திலீபன், அமல்தாஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் ஏராளமானோா் வாக்கு சேகரிப்பின்போது உடனிருந்தனா்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு

சிலிண்டா், குளிா்சாதனப் பெட்டியுடன் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாலாஜாபாத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


