தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம் நகராட்சித் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:30 pm

பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், மருதமுத்தூரில் பனையேறும் தொழிலாளி மணிகண்டனை துப்பாக்கியால் சுட்ட ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜாவை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக திட்டியது, பெண்களைத் தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டியதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பாண்டியன் தலைமை வகித்து, காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினாா்.

தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஏராளமானோா் இதில் பங்கேற்றனா்.