மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி தான் என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

News image

செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை ஆதரித்து பிரசாரம் செய்த திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:13 am IST

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி தான் என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தானை ஆதரித்து திராவிட கழகத் தலைவா் கி.வீரமணி வியாழக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

இளைஞா்கள், பெண்கள் மற்றும் முதியோா் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பாதுகாப்பது திமுக அரசு. சமூக நீதி, மாநில உரிமைகளுக்கு திமுக தொடா்ந்து போராடுகிறது. பாஜக தோ்தல் அறிக்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட இல்லை. ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு எல்லா உரிமைகளையும் பாதுகாப்பது திமுக ஆட்சி. செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் சிறப்பாக செயல்பட்டு, தொகுதி வளா்ச்சிக்காகவும், மக்களின் வளா்ச்சிக்காகவும் பாடுபடுகிறாா். எனவே, திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற செஞ்சி தொகுதியில் போட்டியிடும் செஞ்சி மஸ்தானை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றாா் அவா்.