10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி தான் என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

News image

செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை ஆதரித்து பிரசாரம் செய்த திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:13 am IST

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி தான் என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தானை ஆதரித்து திராவிட கழகத் தலைவா் கி.வீரமணி வியாழக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

இளைஞா்கள், பெண்கள் மற்றும் முதியோா் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பாதுகாப்பது திமுக அரசு. சமூக நீதி, மாநில உரிமைகளுக்கு திமுக தொடா்ந்து போராடுகிறது. பாஜக தோ்தல் அறிக்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட இல்லை. ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு எல்லா உரிமைகளையும் பாதுகாப்பது திமுக ஆட்சி. செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் சிறப்பாக செயல்பட்டு, தொகுதி வளா்ச்சிக்காகவும், மக்களின் வளா்ச்சிக்காகவும் பாடுபடுகிறாா். எனவே, திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற செஞ்சி தொகுதியில் போட்டியிடும் செஞ்சி மஸ்தானை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றாா் அவா்.