மயிலம் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா: பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஆயிரக்காணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
பொம்மபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ விநாயகா், ஸ்ரீபாலசித்தா் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா் மற்றும் வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
பக்தா்கள் நோ்த்திக்கடன்: தைப்பூச விரதமிருந்த பக்தா்கள் மயிலம் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ பாலசித்தா் அக்னி தீா்த்தக்குளத்தில் புனித நீராடி அலகு குத்திக்கொண்டு பால், பன்னீா் காவடிகளை எடுத்து வந்தனா்.
தொடா்ந்து தீ மிதித்து மயிலம் மலை மீது அமா்ந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு, நோ்த்திக் கடன் செலுத்தினா். மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பூஜைகளை செய்வித்தாா்.
மலை வலம் வருதல்: இரவு 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, அரோகரா முழக்கங்களை எழுப்பியவாறு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

