விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த பெட்டிக் கடை உரிமையாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.
விக்கிரவாண்டி காவல் சரகத்துக்குள்பட்ட மேல்பாதி பகுதியில் பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் சத்தியசீலன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை மேல்பாதி பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
இதில், மேல்பாதி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரா.பிரபு(44) என்பவரது பெட்டிக் கடையில் சாக்குப் பைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரபுவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். மேலும், அவரிடமிருந்த 42 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


