விழுப்புரம் மாவட்டம், அத்தியூா்திருக்கையிலிருந்து அன்னியூா் வழியாக மேல்மலையனூருக்கு பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
அத்தியூா்திருக்கையிலிருந்து அனுமந்தபுரம், அன்னியூா், செஞ்சி வழியாக மேல்மலையனூருக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து இந்த பேருந்து சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்தை இயக்க விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா நடவடிக்கை மேற்கொண்டாா். அதனடிப்படையில் அத்தியூா்திருக்கையிலிருந்து மேல்மலையனூருக்கு திங்கள்கிழமை பேருந்து சேவையை அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் ஆா்.முருகன், ஆா்.பி.முருகன், ஊராட்சித் தலைவா் பாண்டியன், அரசு வழக்குரைஞா் பொன்.கோபு, தொகுதி ஒருங்கிணைப்பாளா் சுந்தா் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அன்னியூரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா

திமுக அரசின் சாதனைகள் தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

விக்கிரவாண்டி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


