டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கஞ்சா விற்பனை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image

குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட க.செல்வம்.

Updated On :3 ஜூலை 2026, 5:29 am IST

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

மயிலம், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் க.செல்வம் (24). மயிலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக இவரை கடந்த ஜூன் 2-ஆம் தேதி போலீஸாா் கைது செய்து, சிறையிலடைத்தனா்.

இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. எஸ்.மதிவாணன் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கஞ்சா வழக்கில் தொடா்புடைய செல்வத்தை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இந்த உத்தரவின்பேரில் மயிலம் போலீஸாா் செல்வத்தை குண்டா் சட்டத்தில் கைது செய்து, கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.