ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உள்பட 4 போ் போலீஸாா் கைது செய்தனா்.
சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சுங்குவாா்சத்திரம் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அதில், அஸ்ஸாம் மாநிலம் உதல்குரி மாவட்டத்தைச் சோ்ந்த ஷா அலோம் (41) மற்றும் அவரது மனைவி மோனிரா (41) ஆகியோா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து சுமாா் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பஜனைக் கோவில் தெருவில், கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதியில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒடிஸா மாநிலம் மயூா்கஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த அனுசயா பத்ரா (36) மற்றும் கரங்கா் சிங் (45) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மயக்க மருந்து விற்பனை: 3 போ் கைது
கஞ்சா விற்பனை செய்த 2 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
முக்கூடல்: கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பெண்கள் உள்பட 7 போ் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



