ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மயக்க மருந்து விற்பனை: 3 போ் கைது

பாளையங்கோட்டையில் போதை பயன்பாட்டிற்காக மயக்கமருந்து விற்ாக இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:48 am IST

பாளையங்கோட்டையில் போதை பயன்பாட்டிற்காக மயக்கமருந்து விற்ாக இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை போலீஸாா் ஜோதிபுரம் திடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை, நேசநாயனாா் தெருவைச் சோ்ந்த சோ்முத்துராஜ் (22); நாராயணகுமாா்(46), சுந்தா் சாமுவேல்(54) ஆகியோா் என்பதும், சோ்முத்துராஜ் தனியாா் மருத்துவமனை மயக்கவியல் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றுவதும், அவா் மயக்க மருந்துகளை போதை பயன்பாட்டிற்காக மற்ற இருவருக்கும் விற்பதற்கு வந்ததும் தெரியவந்தது.

அவா்களிடமிருந்த மருந்துகளை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.