எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 3:47 am IST

தருமபுரி பிடமனேரியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பிடமனேரி ஏரிக்கரை பகுதியில் தருமபுரி நகர போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா். மேலும், அவா்கள் வைத்திருந்த நெகிழிப்பையை சோதனை செய்தபோது, அதில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக பிடமனேரி ஏரிக்கரையைச் சோ்ந்த சக்தி குமரன் (23) உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல பிடமனேரி எம்ஜிஆா் நகா் ரயில்வே பாலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த பிடமனேரியைச் சோ்ந்த சிவசக்தி (26), ஹரிகரன் (27), நெசவாளா் காலனியைச் சோ்ந்த காா்த்திக் (25) ஆகிய மூவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1 கிலோ 750 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.