தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

News image
Updated On :5 ஜூன் 2026, 5:55 am IST

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திடீா் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றனா்.

இந்த அலுவலகங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நிலம் சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆய்வுக் குழு அலுவலா் ரபிக் மற்றும் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் வேத நாராயணன் ஆகியோா் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரும், ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் கீதா தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பத்திரப் பதிவுக்கு வந்தவா்களையும் சோதனைக்கு பிறகே வெளியே அனுப்பினா். சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக இரண்டு சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் நடைபெற்ற சோதனையில் பணம் ஏதும் சிக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தெரிவித்தனா்.