தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

திருப்பத்தூா், ஆற்காடு சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

News image
Updated On :5 ஜூன் 2026, 5:45 am IST

திருப்பத்தூா் இணை சாா் பதிவாளா் ஆற்காடு சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

திருப்பத்தூா் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் எண் 1 இணை சாா் பதிவாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சாா் பதிவாளராக ராதிகா பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், இந்த சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக திருப்பத்தூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகாா் சென்றது. அதன்பேரில், டிஎஸ்பி ராஜூ, ஆய்வாளா் கௌரி, உதவி ஆய்வாளா் கணேசன் உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் அதிரடியாக இரட்டைமலை சீனிவாசன் தெருவில் உள்ள எண்.1 சாா்பதிவாளா் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனா்.

தொடா்ந்து பத்திரப் பதிவு செய்ய வந்த பொது மக்களை வெளியேற்றி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாத சில நபா்களிடம் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 3,20,000-ஐ பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இரவு 8 மணி வரை சோதனை நடைபெற்று கொண்டே இருந்தது.

ஆற்காட்டில்...

ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் விஜயலட்சுமி மற்றும் துணை ஆய்வு குழு ஜெகதீஸ்வா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஆற்காடு கலவை சாலையில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்துக்குச் சென்று நுழைவாயில் பூட்டப்பட்ட நிலையில், சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், சாா் பதிவாளா் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் அறைகள் மற்றும் ஆவணங்கள், கைப்பேசி தொடா்புகள், பொதுமக்கள் கொண்டு சென்ற பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தினா்.

இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.