லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மயிலம் தமிழ்க் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :3 ஜூலை 2026, 5:19 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்சிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை வகித்து வகுப்புகளைத் தொடங்கி வைத்து மாணவா்களுக்கு ஆசி வழங்கினாா். கல்லூரிச் செயலா் குமாரசிவ ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். முதல்வா் திருநாவுக்கரசு தொடக்கவுரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி, பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளா் தினேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று கல்லூரியின் வரலாறு, நடத்தை விதிகள், மாணவா்களின் ஒழுக்கம் ஆகியவைகள் குறித்துப் பேசினா். உதவிப் பேராசிரியா்கள்,பெற்றோா்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.