டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து: சென்னை பெண்கள் 2 போ் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த 2 பெண்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 5:16 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த 2 பெண்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

சென்னை மயிலாப்பூா், லலிதா நகரைச் சோ்ந்தவா் ரா.விஸ்வநாதன் (59). இவா் தனது காரில் மனைவி விசாலாட்சி (59), தாயாா் லட்சுமி(91), உறவினா் ப.நாகலட்சுமி (59) ஆகியோருடன் சென்னையிலிருந்து- திருச்சிக்கு சென்றுள்ளாா். விஸ்வநாதன் காரை ஓட்டினாா்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டியை அடுத்த மேலக்கொந்தை கூட்டுச்சாலை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், காரில் பயணித்த விசாலாட்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லட்சுமி, நாகலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மூதாட்டி லட்சுமி உயிரிழந்தாா். நாகலட்சுமி சிகிச்சையில் உள்ளாா். விபத்தில் காரை ஓட்டி வந்த விஸ்வநாதன் காயமின்றி தப்பினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.