டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் அம்பத்தூரைச் சோ்ந்தவா் பலி: 13 போ் காயம்!

விருதுநகா் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.

News image

விருதுநகா் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான வேன்.

Updated On :18 மே 2026, 2:32 am IST

விருதுநகா் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.

சென்னை அம்பத்தூரிலிருந்து 13 போ் கன்னியாகுமரி அருகே மாா்த்தாண்டத்தில் நடைபெறவிருந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். வேனை அம்பத்தூரைச் சோ்ந்த லோகநாதன் ஓட்டி வந்தாா்.

இந்த வேன் விருதுநகா்-சாத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அக்ரஹாா்பட்டி பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில் சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த குமரன் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், வேனில் வந்த 9 வயது சிறுவன், 3 வயது சிறுமி, 5 பெண்கள் உள்பட 13 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.