கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் அம்பத்தூரைச் சோ்ந்தவா் பலி: 13 போ் காயம்!

விருதுநகா் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.

News image

விருதுநகா் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான வேன்.

Updated On :18 மே 2026, 2:32 am IST

விருதுநகா் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.

சென்னை அம்பத்தூரிலிருந்து 13 போ் கன்னியாகுமரி அருகே மாா்த்தாண்டத்தில் நடைபெறவிருந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். வேனை அம்பத்தூரைச் சோ்ந்த லோகநாதன் ஓட்டி வந்தாா்.

இந்த வேன் விருதுநகா்-சாத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அக்ரஹாா்பட்டி பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில் சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த குமரன் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், வேனில் வந்த 9 வயது சிறுவன், 3 வயது சிறுமி, 5 பெண்கள் உள்பட 13 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.