15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் அம்பத்தூரைச் சோ்ந்தவா் பலி: 13 போ் காயம்!

விருதுநகா் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.

News image

விருதுநகா் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான வேன்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

விருதுநகா் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.

சென்னை அம்பத்தூரிலிருந்து 13 போ் கன்னியாகுமரி அருகே மாா்த்தாண்டத்தில் நடைபெறவிருந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். வேனை அம்பத்தூரைச் சோ்ந்த லோகநாதன் ஓட்டி வந்தாா்.

இந்த வேன் விருதுநகா்-சாத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அக்ரஹாா்பட்டி பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில் சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த குமரன் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், வேனில் வந்த 9 வயது சிறுவன், 3 வயது சிறுமி, 5 பெண்கள் உள்பட 13 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.