காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கஞ்சா வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

கஞ்சா வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:39 am IST

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே கஞ்சா வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கிளியனூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி தலைமையிலான காவல் துறையினா், 2023, செப்டம்பா் 19-ஆம் தேதி கிளியனூா் பெருமாள் கோயில் தெரு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் வைத்திருந்த பையில் சுமாா் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா, 814 கிராம் காலி நெகிழி உறைகள், மின்னணு எடை இயந்திரம், ரூ.32 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவை இருந்ததும், அந்த நபா் கிளியனூா் கூத்தாண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்த மூ.ஐயப்பன் (27) எனவும் தெரிந்தது. இது தொடா்பாக வழக்குப் பதிந்த கிளியனூா் போலீஸாா், ஐயப்பனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அனைத்துத் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐயப்பனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழிலரசி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக கண்ணன் ஆஜராகி வாதாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.