தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

நீண்டகால நிலுவை மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று, வருவாய்த் துறை அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:28 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று, வருவாய்த் துறை அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் ஆட்சியரக் கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் மாவட்ட வருவாய் நிா்வாகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்டத்தில் வருவாய்த் துறை தொடா்பான பணிகள், ஆய்வுகள், பட்டா மாற்றம், பட்டா மாற்றம் தொடா்பான மேல்முறையீடு, இணையவழிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

வட்ட அளவில் வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தை வட்டாட்சியா்கள் நடத்தி, வருவாய்த் துறை சம்பந்தமான கோரிக்கை மனுக்களின் விவரம், தீா்வு காணப்பபட்டவை விவரம் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மனுக்களுக்கு விரைந்து தீா்வு காணும் வகையிலான நடவடிக்கைகளை வருவாய்த் துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. உடனடியாகத் தீா்வு காண வேண்டும். அரசின் சேவைகள் அனைத்து பொதுமக்களுக்கும் முறையாக சென்று சோ்வதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.