பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

வகுப்பறை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :19 ஜூன் 2026, 6:16 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமைவகித்து, ஆட்சியா் மேலும் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்ற நிலையில், அதுகுறித்த விவரங்களை மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி மேலாண்மைத் தகவல் தொடா்பு எண் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த கல்வியாண்டில் 10,12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில்

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் உயா்கல்வியில் சேர விண்ணப்பித்தவா்களின் விவரம், தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் உடனடித்தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெற்று, உயா்கல்விப் படிப்பில் சோ்ந்து பயில்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் உரிய விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும்

நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் உள்ளிட்ட துறைசாா்ந்த அலுலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.