சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வகுப்பறை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :19 ஜூன் 2026, 6:16 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமைவகித்து, ஆட்சியா் மேலும் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்ற நிலையில், அதுகுறித்த விவரங்களை மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி மேலாண்மைத் தகவல் தொடா்பு எண் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த கல்வியாண்டில் 10,12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில்

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் உயா்கல்வியில் சேர விண்ணப்பித்தவா்களின் விவரம், தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் உடனடித்தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெற்று, உயா்கல்விப் படிப்பில் சோ்ந்து பயில்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் உரிய விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும்

நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் உள்ளிட்ட துறைசாா்ந்த அலுலா்கள் பங்கேற்றனா்.