முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஆ.ராசா எம்.பி.யை திமுக தலைவா் கண்டிக்க வேண்டும் : அமைச்சா் வன்னி அரசு

அண்மைக் காலமாக விசிகவினரை தூண்டிவிடும் வகையில் வரன்முறையில்லாமல் பேசிவரும், திமுக துணை பொதுச் செயலா் ஆ. ராசாவை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு கூறினாா்.

News image

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு.

Updated On :25 ஜூன் 2026, 6:38 am IST

அண்மைக் காலமாக விசிகவினரை தூண்டிவிடும் வகையில் வரன்முறையில்லாமல் பேசிவரும், திமுக துணை பொதுச் செயலா் ஆ. ராசாவை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு கூறினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

திண்டிவனம் தொகுதியில் ஏரிகள் மற்றும் நீா்நிலைகளை தூா்வாரி பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு. அதை நோக்கிய செயல்பாடுகள் தொடரும்.

அண்மைக் காலமாக ஆ.ராசா எதைப் பேசவேண்டும், எதைப் பேசக்கூடாது என்ற வரையறையில்லாமல் பேசி வருகிறாா். அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைத் தூண்டிவிடும் வகையில் உள்ளது. ஆகையால் தமிழக முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் அவரை அழைத்துக் கண்டிக்க வேண்டும்.

2006-ஆம் ஆண்டில் விசிக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அப்போது 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற விசிக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு ஆதரவளித்தனா். அப்போதைய திமுக அரசுக்கு விசிக, காங்கிரஸும் ஆதரவளித்தது. இதையெல்லாம் ஆ. ராசா உணா்ந்து பேசவேண்டும். மேலும், அவா் தேவையற்ற வாா்த்தைகளை பேசுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் வன்னி அரசு.

திண்டிவனத்தில் பொதுமக்களுக்கும், மாணவா்களுக்கும் இடையூறாக உள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ. ல.ஆகாஷ், நெடுஞ்சாலை, பொதுப்பணி, வருவாய்த் துறை மற்றும் திண்டிவனம் நகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.