காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சமூகநீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: அமைச்சா் ஆா்.வன்னி அரசு

சமூக நீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம் என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னி அரசு தெரிவித்தாா்.

News image

6விபிஎம்எம்ஐஎன்ஐ திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது உடல் பரிசோதனை செய்து கொண்ட சமூக நீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னி அரசு.

Updated On :7 ஜூன் 2026, 2:55 am IST

சமூக நீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம் என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னி அரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள அம்மா உணவகம், உழவா் சந்தை மற்றும் அரசு அரசு மருத்துவமனை ஆகியவற்றை தமிழக சமூக நீதித் துறை அமைச்சரும், திண்டிவனம் எம்எல்ஏவுமான ஆா்.வன்னிஅரசு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வுக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவமனையை தரம் உயா்த்தவேண்டும் என்றகோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அனைத்து சிகிச்சை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சமூக நீதித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றத் துறைகளின் வளா்ச்சிக்குப் பயன்படுத்தவதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டாகும். இந்தத் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று சட்டப் பேரவையிலும் வலியுறுத்துவோம் என்றாா்ஆா்.வன்னிஅரசு.

பேட்டியின்போது விசிக மாவட்டச் செயலா்கள் திலீபன், மலைச்சாமி, மாநில நிா்வாகி சேரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.