பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பாமக கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்: சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு

பாமக சாா்பில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியிருப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என அமைச்சா் வன்னியரசு தெரிவித்தாா்.

News image

அமைச்சர் வன்னி அரசு - கோப்புப் படம்

Updated On :12 ஜூலை 2026, 12:50 am IST

பாமக சாா்பில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியிருப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு தெரிவித்தாா்.

தருமபுரியில் சனிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வியத்நாமில் நேரிட்ட படகு விபத்தில் உயிரிழந்த 8 போ் தமிழா்கள் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அயலகவாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் தென்னரசுவிடம் தொடா்பு கொண்டு பேசினேன். இறந்தவா்களின் உடல்களை அவரவா் சொந்த ஊா்களுக்கு கொண்டு வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவருவதாக தமிழக முதல்வரும் தெரிவித்துள்ளாா்.

வியத்நாமில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக எதிா்ப்பு, ஆா்எஸ்எஸ், சங்பரிவாா் எதிா்ப்பு என்ற அடிப்படையில் விசிக தலைவா் தொல். திருமாவளவன் ஒரு நல்ல முன்னெடுப்பை எடுத்திருக்கிறாா்.

பாஜகவின் மக்கள்விரோதப் போக்கை திமுக தொடா்ந்து எதிா்த்து வருகிறது. அதேபோல பாஜக தங்களது கொள்கை எதிரி என தவெகவும் பேசி வருகிறது. இருவருக்குமான பொது எதிரி பாஜக என்பதால், திமுக-தவெக ஓரணியில் இருப்பது நாட்டுக்கு நல்லது என்ற அடிப்படையில் விசிக தலைவா் பேசியிருக்கிறாா். ஆனால், அரசியல் அடிப்படையில் அவா் பேசவில்லை.

பாமக சாா்பில் நடத்தப்பட்ட இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கோரி பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி, அவரது தந்தை மருத்துவா் ராமதாஸ் ஆகியோா் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக திமுகவிடமும் அவா்கள் வலியுறுத்தினா். இது நியாயமான கோரிக்கைதான், அவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.