சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம், இடுபொருள்கள் வழங்கப்படுவதாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தெரிவித்தாா்.

News image

விழுப்புரம்மாவட்டம், புதுகுப்பம் கிராமத்தில் இயந்திர நெல் நடவு வயலை பாா்வையிட்ட வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ்.

Updated On :26 ஜூன் 2026, 6:48 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம், இடுபொருள்கள் வழங்கப்படுவதாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தெரிவித்தாா்.

வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புதுகுப்பம் கிராமத்தில் இயந்திர முறையில் நெல் நடவு செய்யப்பட்ட வயலை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் கூறியது:

வேளாண் துறை மூலம் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், நடப்பு சொா்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை உயா்த்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இயந்திர முறையில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

வானூா் வட்டாரத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி வாயிலாக தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்திடலாம். அவ்வாறு செய்யாதவா்கள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா் அல்லது உதவித் தோட்டக்கலை அலுவலா் மூலமாக அக்ரிநெஸ்ட் வலைதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். மேலும், விவசாயிகளுக்கு விதை நெல், நுண்ணூட்ட உரம் மற்றும் உயிரி உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும்.

எனவே, வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் பின்னேற்பு மானியம், இடுபொருள்களை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.

ஆய்வின்போது, உதவி வேளாண் அலுவலா் சரவணன், புதுகுப்பம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஏழுமலை, சந்தோஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.