திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் திறப்பு

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 5.79 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

News image
செஞ்சி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடத்தை சென்னையில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தை தொடா்ந்து, புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றிய செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.
Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 5.79 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இதனை தொடா்ந்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பத்மஜா தலைமையில், முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் ஆகியோா் குத்து விளக்கேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ் செல்வன், மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் கண்ணன், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் அரங்க ஏழுமலை, அகிலா பாா்த்திபன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அமுதவள்ளி, ராமதாஸ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுந்தரபாண்டியன், காஞ்சனா, சசிகலா, அபிராமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.